தினசரி தியானம் |
எதிரொலி எந்தையே, நீ மனத்தகத்து மாறாது வீற்றிருந்துகொண்டு எனது வாழ்வு மயமான ஓலத்துக்கேற்ற எதிரொலியை உண்டு பண்ணுகிறாய். வாய்ப்பு அனைத்தும் ஒருங்கே அடையப் பெற்ற இளைஞன் ஒருவன் வாழ்வு இனிமையே வடிவெடுத்தது என்கிறான், இனிமை என்ற எதிரொலி மனச்சாக்ஷியினிடமிருந்து வருகிறது. துயருறுவோன் ஒருவன் இதுவும் ஒரு வாழ்வா என்கிறான். இதுவும் ஒரு வாழ்வா என்னும் எதிரொலி உள்ளிருந்து வருகிறது. அவரவர் பாங்குக்கேற்ற பதில் உள்ளிருந்து வருகிறது. பக்குவமடைந்தவர்க்கு எதிரொலியில்லை. பொருள் உள்ளபடி மிளிர்கிறது. சொல்லிறந்து நின்ற சுகரூபப் பெம்மானை அல்லும்பகலும் அணைவேனோ பைங்கிளியே? -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|