ஆக்ஸ்போர்டு ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசிக்கு அனுமதி வழங்க பரிந்துரை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜனவரி 02, 2021, 07:55 [IST] பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலையும், 'ஆஸ்ட்ராஜெனகா' நிறுவனமும் இணைந்து, கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை தயாரித்து உள்ளன. கோவிஷீல்டு என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பு மருந்தை, நம் நாட்டில் பரிசோதித்து, தயாரிக்கும் பொறுப்பை, மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’ நிறுவனம் ஏற்றுள்ளது. இந்த கோரிக்கையை பரிசீலித்த, மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் குழு, தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்க, பரிந்துரைத்தது. இதுகுறித்து, மருந்துகள் ஒழுங்குமுறை விவகாரப் பிரிவின் கூடுதல் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங், நேற்று கூறுகையில், “கோவிஷீல்ட் தடுப்பு மருந்து, பாதுகாப்பானதாக உள்ளது. எனவே, கொரோனா வைரசை தடுக்க, மக்களுக்கு அதை அளிக்கலாம்,” என்றார். இவ்விஷயத்தில், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் இறுதி முடிவு எடுத்து, அடுத்த ஓரிரு நாட்களில் அறிவிக்கும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அனுமதி இருந்தால்தான் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். மேலும், சீரம் நிறுவனத்திடம் தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிற வெளிநாடுகளுக்கும் அதை விநியோகிக்க சட்ட அனுமதி கிடைக்கும். இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் இறுதி அனுமதி ஓரிரு தினங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பாரத் பயோடெக் (கோவேக்சின் தடுப்பூசி), சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி), ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனுமதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த மாத தொடக்கத்தில் விண்ணப்பித்திருந்தன.
|
சுந்தர் பிச்சை மொழிபெயர்ப்பாளர்: கார்த்திகா குமாரி மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: ஜூலை 2019 பக்கங்கள்: 144 எடை: 175 கிராம் வகைப்பாடு : வெற்றிக் கதைகள் ISBN: 978-93-83067-64-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 133.00 தள்ளுபடி விலை: ரூ. 120.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ ஐ டி காரக்பூரில் படித்தவர். கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன. அவர் உருவாக்கிய அல்லது வழிநடத்திய எல்லாத் தயாரிப்புகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன-குரோம்,குரோம் ஓஎஸ்,ஆண்டிராய்டு இப்படிப் பலவற்றை சொல்லலாம். சுந்தர் பிச்சையின் குழந்தைப் பருவம், கல்வி, தொழில்நுட்ப உலகில் அவர் புகுந்தது,கூகிளில் அவர் வளர்ந்தது,கூகிளின் முக்கியமான தயாரிப்புகளை அவர் வழி நடத்தியது போன்ற பழ விஷயங்களை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. சரியான நேரத்தில் வந்திருக்கும் இந்தப் புத்தகம், 21ம் நூற்றாண்டின் மிக முக்கிய நிறுவனமாக கூகிள் எப்படி உருவானது என்பதைப் பற்றியும் , அதனை முதலிடத்துக்கு கொண்டு சென்ற அதன் சூழல் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. ஜக் மோகன் எஸ்.பன்வர் இந்தியாவின் 3 மிகப் பெரிய வங்கிகளின் தேசிய மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளை கையாளுவதில் பங்கு வகித்திருக்கிறார். சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும்,செயற்குழு உறுப்பினர்களுக்கும்,பிரத்யேக பயிற்சிகள் அளித்து வருகிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|