ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : டிசம்பர் 10, 2018, 18:10 [IST] பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதில் இருந்தே ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான போக்கு காணப்படவில்லை. ரிசர்வ் வங்கியை நிர்வகிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர், துணை ஆளுநர்கள் இருந்தபோதிலும், கூடுதலாக ரிசர்வ் வங்கி வாரியக்குழுவை மத்திய அரசு நியமித்தது. அந்த குழுவின் தலையீடு அதிகமாக இருந்ததால், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே உரசல் நீடித்து வந்தது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா மத்தியஅரசை கடுமையாக விமர்சித்தார். இந்த சூழலில் ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு ஈவுத்தொகை வழங்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு ஈவுத்தொகையாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க இருக்கிறது. ஆனால், ரிசர்வ் வங்கியிடம் உபரிநிதியாக இருக்கும் ரூ.3.50 லட்சம் கோடியை தனது நிதிப்பற்றாக்குறையைச் சரி செய்து கொள்வதற்காக கேட்டு, மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகின. இதனால் உரசல் ஏற்பட்டதாகவும், கடந்த மாதம் 19-ம் தேதி நடந்த வாரியக் கூட்டத்தில் உர்ஜித் படேல் ராஜினாமாவை அறிவிக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவித்தன. பின்னர் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து வாரியக்கூட்டம் சுமூகமாக நடந்தது. இந்நிலையில் உர்ஜித் படேல் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனடியாக விலகுகிறேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் அரசு கொடுத்த அழுத்தமே இதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக உர்ஜித் படேல், 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.
|
உங்கள் வீட்டிலேயே ஒரு பியூட்டி ஃபார்லர் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘குங்குமம் தோழி’ இதழில் வெளியானபோது பல லட்சக்கணக்கான பெண்களை அழகிகளாக மாற்றிய அழகு ரகசியங்கள் இந்தப் புத்தகமாக மலர்ந்துள்ளது! பெண்களுக்கு தன் அழகு மீது கர்வம் மட்டுமல்ல... கவனமும் அதிகம். இயல்பாகவே அழகாக இருக்கும் பெண்கள் கூட, தங்களை மேலும் அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டவே செய்கின்றனர். அழகானவர்களே இப்படி என்றால், ‘நாம் அழகி இல்லை’, ‘நாம் சுமாரானவள்’ என்று தங்களைப் பற்றிக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்கிற பெண்களுக்கு, தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் எத்தனை ஆர்வம் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கடந்த தலைமுறைப் பெண்களுக்கு தங்களை கூடுதல் அழகாக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. அதிகபட்சமாக, முகத்தில் மஞ்சளை பூசிக் கொள்வதோடு அவர்களின் ‘அழகாகும் ஆசை’ அரைகுறையாக முடிந்து போனது. இன்றைய பெண்களுக்கு அப்படிப்பட்ட துயரம் இல்லை. சாதாரண பெட்டிக்கடைகளில் கூட அழகுசாதனப்பொருட்கள் எளிதில் கிடைக்கின்றன. அப்பொருட்களில் திருப்தியடையாதவர்களுக்கு இருக்கவே இருக்கின்றன... பியூட்டி பார்லர் என்கிற அழகு நிலையங்கள்! ஒருகாலத்தில் வசதிபடைத்த சீமாட்டிகள் மட்டுமே செல்லக்கூடிய இடமாக இருந்தன பியூட்டி பார்லர்கள். இன்றைக்கு? பெரு நகரங்களில் மட்டுமல்ல, சிறு நகரங்களிலும் இப்போது எங்கு திரும்பினும் அழகு நிலையங்கள். ஆனாலும், நடுத்தர வர்க்கப் பெண்கள் அழகு நிலையங்களுக்குள் அத்தனை சுலபமாக பிரவேசித்துவிடுவதில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. அப்படியானதொரு சூழலில், வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லரை நிறுவி, உங்களையும் குடும்பத்தினரையும் அழகுபடுத்திக்கொள்ள வழிகாட்டுகிறது இந்நூல். அழகுக்கு அழகு சேர்க்க வாழ்த்துகள்!. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|