அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 27, 2018, 16:30 [IST] உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதி யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அயோத்தி நில உடைமை தொடர்பான வழக்கு கடந்த 1950-ம் ஆண்டில் கோபால் சிங் என்பவரால் தொடரப்பட்டது. அதே போன்று இஸ்லாமிய அமைப்பு சார்பில் சித்திக் என்பவரும் மனு தாக்கல் செய்தார். மனுதாரர்கள் இருவருமே இறந்துவிட்ட நிலையிலும் இந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அயோத்தியின் நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த அலகபாத் உயர் நீதிமன்றம், அயோத்தியிலுள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகியவை சம பாகங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி இஸ்மாயில் பாரூக்கி, கடந்த 1994-ம் தொழுகை நடத்துவதற்கு மசூதிகள் அவசியமான ஒன்று அல்ல என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக்கோரி முஸ்லிம்கள் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதில் தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் தனியாக தீர்ப்பை வாசித்தனர். மற்றொரு நீதிபதியான நஸீர் தீர்பபை தனியாக வாசித்தார். தீபக் மிஸ்ரா மற்றும் அசோக் பூஷண் வழங்கிய தீர்ப்பில், “சொத்து உரிமை தொடர்பான வழக்கில் சான்றுகள் மற்றும் முந்தைய தீர்ப்பின் அடிப்படையிலேயே பரிசீலனை செய்ய முடியும். அதற்கு மாறாக பொருத்தத்தின் அடிப்படையில் முடிவெடுக்க முடியாது. எனவே இதனை 5 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை. அனைத்து மசூதி, தேவாலயங்கள், கோயில்கள் சமூகத்திற்கு முக்கியமானது” எனக் கூறினர். நஸீர் வழங்கிய தீர்ப்பில், “மசூதி என்பது இஸ்லாம் சமயத்தின் ஒருங்கிணைந்த ஒன்றா என்பது குறித்து விரிவான ஆலோசனைகளும், விசாரணைகளும் தேவைப்படுகின்றன” எனக் கூறினார். இதன் மூலம் அயோத்தி சர்ச்சை தொடர்பான மூல வழக்கு அக்டோபர் 29-ம் தேதி நடைபெறுகிறது.
|
மலர் மஞ்சம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2018 பக்கங்கள்: 600 எடை: 650 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-5244-074-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 650.00 தள்ளுபடி விலை: ரூ. 590.00 அஞ்சல் செலவு: ரூ. 0.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தி. ஜானகிராமனின் இரண்டாவது நாவல் 'மலர் மஞ்சம்'. 'கிராம ஊழிய'னில் 1940களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த 'அமிர்தம்' போலவே இந்த நாவலும் 'சுதேச மித்திரன்' வாரப்பதிப்பில் 1960ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. நாவலாசிரியராக தி. ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே. பாத்திரச் சித்தரிப்பு, பின்புலவலு, மொழிச் சரளம், வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற, நிற்கும் படைப்பு. மானுட சேஷ்டைகளைக் கூர்ந்துநோக்கும் தி. ஜானகிராமனின் தீரா வியப்பும் ஆண்-பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய அவரது ஓயாத விசாரணையும் துலங்கும் நாவல் இது. பலதார மணம், மரபை மீறிய காதல் என்று எழுதப்பட்ட கால அளவில் பேசப்பட்ட நாவல் இன்றைய வாசிப்பில் புதிய காலத்தின் கேள்விகளையும் முன்வைக்கிறது. நான்கு மனைவியரை மணந்துகொள்ளும் ஆண் அந்த உறவுகளின் சுமை தாளாமல் ஆன்மீகத்தில் அடைக்கலம் தேடுவது ஓர் இழை. அந்த உறவில் பிறந்த பெண் தனது உரிமையை மெளனமாக நிலைநாட்டுவது இன்னொரு இழை. இந்த இரு இழைகளிலிருந்து விரியும் கதை, பாலி என்ற பாத்திரத்தால் சமகாலத் தன்மை பெறுகிறது. தனது பிறப்புக்கு முன்பே குடும்பம் பேசிவைத்த ஆண் துணையை ஏற்பதா அல்லது தனது மனம் விரும்பும் துணையை வரித்துக்கொள்வதா என்ற பாலியின் தடுமாற்றமும் தீர்வுமே கதையை இன்றைக்கும் பொருந்தும் ஒன்றாக ஆக்குகிறது. ஒருவகையில் பாலி, அவளுடைய காலத்தை மீரியவள். தனத்துக் தளை பூட்டிய மரபுகளை உதித்தவள். பாலியே தி. ஜானகிராமனின் பிற்காலப் பெண் பாத்திரங்களின் மூலப் பிரதிமை. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|