காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஜூன் 23, 2018, 07:55 [IST] காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைப்பது தொடர்பான அறிவிப்பு ஜூன் 1ல் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றுக்கு தலைவர், உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணையத் தலைமையகம் புதுதில்லியில் செயல்படும். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பகுதி நேர உறுப்பினர்களாக மத்திய நீர் வளத் துறையின் இணைச் செயலர், மத்திய வேளாண்மைத் துறையின் ஆணையர், மத்திய வேளாண்மை துறையின் இணைச் செயலார், கர்நாடக மாநில நீர் வளத்துறை நிர்வாகச் செயலாளர், கேரள நீர் வளத்துறை செயலர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணித்துறை ஆணையரும், செயலருமான ஏ.அன்பரசு, தமிழக அரசின் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நீர் மேலாண்மை ஆணைய செயலராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளரான ஏ.எஸ்.கோயல் செயல்படுவார். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு: காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் செயல்படும். காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுtஹ் தலைவராக மத்திய நீர் ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பை இவர் கூடுதலாக கவனிப்பார். உறுப்பினர்களாக கர்நாடக மாநில நீர் வளத்துறை தலைமைப் பொறியாளர் (பெயர் அறிவிக்கப்படவில்லை), கேரள தலைமைப் பொறியாளர் கே.ஏ.ஜோஷி, புதுச்சேரி பொதுப்பணித் துறைத் தலைமைப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், தமிழக அரசின் நீர் வளத் துறையின் திருச்சி மண்டலத் தலைமை பொறியாளர் ஆர்.செந்தில்குமார், இந்திய வானியல் ஆய்வு மையத்தின் அறிவியலாளர் எம்.மொஹபத்ரா, சி.எஸ்.ஆர்.ஓ.வின் தலைமைப் பொறியாளர் கிருஷ்ண உண்ணி, மத்திய வேளாண்மைத் துறையின் தோட்டக்கலை ஆணையர், குழுவின் உறுப்பினர் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
கரும்புனல் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2013 பக்கங்கள்: 224 எடை: 300 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-80545-87-05 இருப்பு உள்ளது விலை: ரூ. 170.00 தள்ளுபடி விலை: ரூ. 155.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும் அதற்கு பின்புலமாக ஒரு பெரிய சுரண்டல் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த வன்முறைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் அந்த முன்கதைச் சுருக்கத்தை எளிய, நீர்த்த ஒரிரு வார்த்தைகளோடு கடந்து போய்விடுவதைக் காணலாம். அத்தகைய ஒரு முன்கதைச் சுருக்கத்தை கரும்புனலில் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களோடு விவரிக்கிறார் ராம் சுரேஷ். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|