பல்சுவை இணைய இதழ்
  


மே 30, 31ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 12, 2018, 07:50 [IST]

புதுதில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்.

ஊதிய விகித மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வரும் 30, 31 ஆகிய இரு தினங்களுக்கு நாடு முழுதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, பொதுத் துறை வங்கிகளை இணைக்கக் கூடாது, வாராக்கடன் கட்டாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும், வாராக்கடன் வசூலிப்பதை விரைவுபடுத்த வேண்டும், பெரு முதலாளிகள், பெரு நிறுவனங்கள் கட்ட வேண்டிய வாராக்கடன்களை தள்ளுபடி செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த ஆண்டு அக்டோபரில் முடிவடைந்தது. நவம்பர் மாதத்தில் இருந்து புதிய ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், வாராக்கடனை காரணம் காட்டி, 2 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்க, வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்தன. ஆனால், வங்கி ஊழியர் சங்கங்கள் இதனை ஏற்கவில்லை.இதுதொடர்பாக, கடந்த 5ம் தேதி மும்பையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

எனவே மே 30ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் ஒன்றாம் தேதி காலை 6 மணி வரை, 48 மணி நேர தொடர் வேலை நிறுத்தத்திற்கு வங்கி ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தேசிய வங்கி ஊழியர்கள் மற்றும் வங்கி சேவை தொடர்பான பணியில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களும் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்தில் தனியார் மற்றும் அரசு வங்கிகளைச் சேர்ந்த பத்து லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்










மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ் 5G இனியும் இனிது
ஆசிரியர்: சுவாமி சுகபோதானந்தா
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
விலை: ரூ. 250.00
தள்ளுபடி விலை: ரூ. 240.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சிந்தனை முழக்கங்கள்
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

நந்தவனம்
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

வானம் பொய்க்காது
இருப்பு உள்ளது
ரூ.110.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)