பல்சுவை இணைய இதழ்
  


டிஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தற்கொலையே: வழக்கை கைவிட்டது சிபிஐ

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 07, 2018, 18:10 [IST]

கோவை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கை கைவிட்டதாக கோவை தலைமை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

என்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக விஷ்ணுப்பிரியா தந்தை ரவி குற்றம்சாட்டியிருந்தார்.

முதலில் டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விஷ்ணுப்பிரியாவின் தந்தை சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து, 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த 2 வருடங்களாக சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், விசாரணை முடிந்த நிலையில் கோவை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில், விஷ்ணுப்பிரியா மரணம் கொலை அல்ல. அவர் தற்கொலையே செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருமில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விஷ்ணு பிரியா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதைத்தான் சிபிஐ கண்டுபிடித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு அவர் செய்தது தற்கொலைதான் எனக்கூறி இந்த வழக்கை முடித்துள்ளனர். இதன் மூலம் சிபிஐ இரண்டு வருடங்களை வீண் செய்துள்ளதாக விஷ்ணுப்பிரியா உடன் வேலை செய்த சக போலீசார் கருதுகின்றனர்.

பிற செய்திகள்










உலக இலக்கியப் பேருரைகள்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வகைப்பாடு : சொற்பொழிவு
விலை: ரூ. 325.00
தள்ளுபடி விலை: ரூ. 310.00
அஞ்சல்: ரூ. 50.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



உலக சினிமா - ஓர் பார்வை
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சீனாவில் இன்ப உலா
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

பூவும் பிஞ்சும்
இருப்பு உள்ளது
ரூ.60.00
Buy

கதம்ப மலர்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)