மன்னார்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.6 லட்சம் கொள்ளை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 07, 2018, 17:45 [IST] திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி செயல்பட்டுவருகிறது. இன்று மதியம் வங்கிக்குள் வாடிக்கையாளர் கூட்டம் குறைவாக இருந்த நேரத்தில் உள்ளே நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை சிறை பிடித்தனர். பின்னர் வங்கியிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தையும், 10 சவரன் நகையையும் கொள்ளையடுத்துச் சென்றனர். போகும் போது வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவையும் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவத்தினால் வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் அதிர்ச்சியடைந்தனர். கொள்ளையர்கள் லாக்கரை துப்பாக்கியால் சுட்டு திறக்க முயற்சித்தனர். இருப்பினும் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.12 கோடி ரூபாய் தப்பியது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அருகிலிருக்கும் சிசிடிவி காட்சிகள் கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் இதே போல் மதுரை இந்தியன் வங்கியில், பட்டப்பகலில் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|