பல்சுவை இணைய இதழ்
  


காவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 23:50 [IST]

புதுதில்லி: காவிரி தொடர்பாக வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாபஸ் பெற்று உள்ளது. தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆட்சேபணையை அடுத்து மத்திய அரசு மனுவை வாபஸ் பெற்று உள்ளது.

வரைவு திட்டத்தை தயாரிக்க இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பிற செய்திகள்










உங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்
ஆசிரியர்: கோ. சந்திரசேகரன்
வகைப்பாடு : கணினி / இணையம்
விலை: ரூ. 45.00
தள்ளுபடி விலை: ரூ. 40.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

தூரன் கட்டுரைகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

சரணாகதி
இருப்பு உள்ளது
ரூ.125.00
Buy

மின்னிழை சிறகுகள்
இருப்பு உள்ளது
ரூ.66.00
Buy

மைத்துளிகளின் மைதானங்கள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இடர் களையாய்...
இருப்பு உள்ளது
ரூ.140.00
Buy

ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)