ராகுல் காந்தி சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 08:30 [IST] கர்நாடக மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலில் பிரசாரம் செய்ய டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர் கவுசல் வித்யார்த்தி மற்றும் அவரது பாதுகாப்பாளர்களும் விமானம் மூலமாக ஹூப்ளிக்கு நேற்று (வியாழக்கிழமை) வந்தனர். அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை சரி செய்ய முயன்றும் விமானியால் முடியவில்லை. ஆட்டோ பைலட் முறையும் ஒத்துழைக்காத நிலையில், விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் இரண்டு முறை தரையிறக்க முடியவில்லை. தொடர்ந்து ஒரு புறமாக தரையில் சாய்ந்தவாறே சென்ற விமானம் இறுதியாக 400 முதல் 500 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கவுசல் வித்யார்த்தி, கர்நாடக டிஜிபி யிடம் புகார் அளித்துள்ளார். விமான போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு எதிர்பாராமல் நடந்த ஒன்று எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர். இதையடுத்து சிறப்பு பாதுகாப்பு உள்ள ராகுல் சென்ற தனி விமானத்தின் பராமரிப்பு குறித்தும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறுகள் குறித்த விசாரணைக்கு விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. ரெலிகார் ஏவியேசன் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் தான் ராகுல் காந்தி பயணம் செய்துள்ளார். இந்த விமானம் விடி ஏவிஎச் பால்கன் 2000 என்ற ரகத்தை சேர்ந்தது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|