தேனித் தமிழ்ச் சங்கம்: புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 16, 2018, 08:30 [IST] தேனித் தமிழ்ச் சங்கத்தின் சித்திரை மாதக் கூட்டம் வருகிற 21-4-2018 அன்று மாலை 6.00 மணிக்கு தேனி, மதுரை சாலையிலுள்ள மாயா புத்தக நிலைய மாடியில் தலைவர் தேனி மு. சுப்பிரமணி அவர்களது தலைமையில், செயலாளர் சு.சி. பொன்முடி, துணைச்செயலாளர்கள் மருத்துவர் பிரீத்தா நிலா, அ. முகமது பாட்சா ஆகியோர் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் காந்திகிராமம், காந்திகிராமக் கிராமியப் பல்கலையின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், குடியரசுத்தலைவரின் இளம்தமிழறிஞர் விருது பெற்றவருமான முனைவர் சி. சிதம்பரம் ‘புத்தக வாசிப்பும் புதிய சிந்தனைகளும்’ என்ற தலைப்பிலும், தேனி, நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ம. தேவகி ‘வாழ்க்கையின் உயர்வுக்கு வழிகாட்டும் புத்தகங்கள்’ எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றவிருக்கின்றனர். இக்கூட்டத்திற்கு சங்கத்தின் துணைத்தலைவர் ந.வீ.வீ. இளங்கோ வரவேற்புரையும், சங்கத்தின் பொருளாளர் கவிஞர் ம. கவிக்கருப்பையா நன்றியுரையுமாற்றவிருக்கின்றனர். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென்று சங்கத்தின் தலைவர் தேனி மு.சுப்பிரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|