வடபழனி: கணவனை கட்டி போட்டு நகைக்காக மனைவி படுகொலை கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 16:35 [IST] சென்னை வடபழனியில் தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிரபு என்பவர், தனது மனைவி ஞானப்பிரியாவுடன் வசித்து வந்தார். இவர் வடபழனி சிவன் கோவிலில் குருக்களாக இருப்பவர். நள்ளிரவில் முதல் தளத்தில் உள்ள இவர்களது வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று, இருவரது கை, கால்களை கயிறு மற்றும் துணியால் கட்டிப் போட்டுள்ளது. பிரபுவை தாக்கி குளியலறையில் போட்டுவிட்ட்டு, ஞானப்பிரியாவை கொலை செய்த அந்த கும்பல் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், பீரோவில் இருந்த நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது. இன்று காலை வீடு திறந்து கிடப்பதைக் கண்ட வீட்டின் உரிமையாளர் விஜயலட்சுமி, உள்ளே சென்று பார்த்த போது, ஞானப்பிரியா வீட்டின் கழிவறையில் தலையில் படுகாயங்களுடனும், மற்றொரு அறையில் பிரபு கைகள் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதைக் கண்டார். உடனே விஜயலட்சுமி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து வடபழனி காவல்துறையினர் அங்கு வந்து ஆய்வு செய்ததில், ஞானப்பிரியா உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து படுகாயத்துடன் இருந்த பிரபுவை காவல்துறையினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கொலைக்கான காரணத்தை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபு சுயநினைவுக்கு வந்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும்.
|
கேம் சேஞ்சர்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2020 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: இருப்பு இல்லை விலை: ரூ. 240.00 தள்ளுபடி விலை: ரூ. 220.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (594) தளராத ஊக்கம் உடையவர்களிடம் ஆக்கம் இருக்கும் என்கிறது வள்ளுவனின் வரிகள். அதுமட்டுமல்ல... ஆக்கம் அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும் என்கிறார். அப்படி ஊக்கத்தைக் கைவிடாது ஆக்கபூர்வமாக செயல்பட்டவர்கள்தான், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ரெட்பஸ், ஊபர், ஸ்விகி, ஃபிளிப்கார்ட்... போன்ற ஸ்டார்ட்அப்களை உருவாக்கினார்கள். அவர்கள் தாங்கள் எடுத்த முயற்சியில் முன்னேறியவர்கள் மட்டுமல்ல... வெற்றியின் உச்சத்தைத் தொட்ட மேஜிக்காளர்கள். எப்படி என்கிற கேள்வியில்தான் ஒளிந்திருக்கிறது அந்த மேஜிக். படிப்படியாய் முன்னேற்றத்தில் வரும் தோல்வி, இலக்கை அடையும்போது தோன்றும் சறுக்கல் இவ்விரண்டும் சந்திக்கும் அந்தப் புள்ளி, மூளையில் ஒளிரும் ஒளிதான் இவர்களை மாத்தி யோசிக்க வைத்திருக்கிறது. இவர்களின் மாற்று யோசனையில் உருவான கண்டுபிடிப்புகள் உலகையே ஆண்டுகொண்டிருக்கின்றன. சட்டென்று உதித்த ஐடியாவை ஆக்கபூர்வ வழியில் செயல்வடிவமாக்கியவைதான், இப்போது உலக மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப்கள். அவை எப்படி உருவாகின என்பதைப் பற்றி ஆனந்த விகடனில் கார்க்கிபவா எழுதிய தொடர் கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. இனி உள்ளே கேம்கேஞ்சர்ஸின் மேஜிக் ஸ்டார்ட்... நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|