மான் வேட்டை வழக்கு: சல்மான் குற்றவாளி என தீர்ப்பு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 14:31 [IST] 1998-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ‘ஹம் சாத் சாத் ஹெயின்’ என்ற ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலி கான், நடிகைகள் தபு, நீலம், சோனாலி பிந்த்ரே ஆகியோர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சென்றிருந்தனர். அன்று இரவு, ஜோத்பூரை ஒட்டிய கங்கனி கிராமத்தில் ‘வெளி மான்’ (பிளாக் பக்) என்ற அரிய வகை மான்கள் இரண்டினை சல்மான் கான் வேட்டையாடியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சல்மான் கான், சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சல்மான் கான் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சைப் அலி கான், நடிகைகள் தபு, சோனாலி பிந்தரே, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக தனியாக ஒரு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் இருந்து சல்மான் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|