காவிரி போராட்டம் : ஸ்டாலின், ஆதரவு கட்சித் தலைவர்கள் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 05, 2018, 11:25 [IST] உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்தபடி 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக காலம் தாழ்த்திய மத்திய பாஜக அரசை கண்டித்து இன்று திமுக மற்றும் ஆதரவு கட்சிகள் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காமராஜர் சாலையை நோக்கிச் சென்றனர். திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் திமுகவின் ஆதரவு கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோர், காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து மெரினா நோக்கி செல்ல முற்பட்டனர். போலீசார் அவர்களை மெரினா நோக்கி செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோர் உழைப்பாளர் சிலை எதிரில் சாலையில் அமர்ந்து மறியிலில் ஈடுபட்டனர். இதைஅடுத்து, ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், வீரமணி, ஜவாஹிருல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், தொண்டர்கள் பெருமளவில் குவிந்துள்ளதால், அவர்களை கலைக்க முடியாமலும், போதிய பேருந்துகள் இல்லாததால், கைது செய்வதற்கு இயலாமலும் போலீசார் திணறி வருகிறார்கள். இதனால் சென்னையின் முக்கியமான சாலைகளான அண்ணா சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது.
|
யானைகளின் வருகை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 160 எடை: 200 கிராம் வகைப்பாடு : சூழலியல் ISBN: 978-81-93766-75-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 180.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இயற்கையோடு இணைந்து வாழ்ந்த மனிதன் தன் பேராசையால் பிற உயிர்கள் வாழும் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டதன் விளைவாக காடுகள் அழிக்கப்பட்டன. இதனால் காட்டில் வாழும் உயிர்கள் நேராக மனிதர்கள் இருப்பிடம் தேடி வர ஆரம்பித்தன. உணவும், தண்ணீரும் இல்லாமல் வாயலை நாசம் செய்கின்றன. இப்போது சுற்றுச்சூழல், பிற உயிர்களுக்கான வாழிடம் குறித்த குரல்கள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் யானைகளுக்கும், மனிதர்களுக்குமான அன்பின் பிணைப்பு குறித்தும், சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்தும், இதைச் சுற்றி இயங்கும் அரசியல் குறித்தும் யோசிக்க வேண்டியது அவசியம். இந்த அனுபவங்களை மிக எளிமையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் கா.சு.வேலாயுதன். காட்டுயிர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து எழுதி கவனம் பெற்று வரும் இவர், இந்து தமிழ் இணையதளத்தில் ‘யானைகளின் வருகை' என்று எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|