மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா காலமானார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 20:45 [IST] தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி 27 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் நெல்சன் மண்டேலா. இவரது மனைவி வின்னி மண்டேலா (வயது 81). நெல்சன் மண்டேலாவின் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் அவருடன் இணைந்து செயல்பட்டவர். நெல்சன் மண்டேலா 27 வருடம் ஜெயிலில் இருந்த போது வெளியில் போராட்டத்தை முன்னின்று நடத்தியது வின்னி மண்டேலா தான். பின்னர் நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்க அதிபராக ஆன போது, அவரது ஆட்சியில் பல பல முக்கிய பதவிகளை வின்னி மண்டேலா வகித்துள்ளார். கடந்த வாரம் வெள்ளி கிழமை வின்னிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக ஜோகன்னெஸ்பர்க் நகரில் உள்ள மில்பார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வின்னி மண்டேலா இன்று காலமானார். மண்டேலாவுக்கு 3 மனைவிகள். மண்டேலா 1944-ம் ஆண்டு, ஈவிலின் மேசேயை மணந்தார். இவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் மூவர் மரணமடைந்துவிட்டனர். 1958-ம் ஆண்டு இருவரும் விவாக ரத்து செய்து கொண்டனர். 1958-ம் ஆண்டு தன்னை விட 16 வயது இளையவரான வின்னியை மணந்தார் மண்டேலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உண்டு. 40 ஆண்டுகாலம் இணைந்து வாழ்ந்த இந்த தம்பதியினர் 1998-ம் ஆண்டு பிரிந்தனர். பின்னர் மண்டேலா தனது 80-வது பிறந்த நாளில் மொசாம்பிகா முன்னாள் அதிபரின் விதவை மனைவி கிரேகா மச்சேசலை 3-வது திருணம் செய்தார்.
|
நாட்டுக் கணக்கு – 2 மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 320 எடை: 360 கிராம் வகைப்பாடு : வர்த்தகம் ISBN: 978-93-88734-03-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 288.00 தள்ளுபடி விலை: ரூ. 260.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பொருளாதாரம் என்பது ஏதோ பேராசிரியர்களும், வல்லுனர்களும், ஆட்சியார்களும் மட்டும் தெரிந்துகொள்கிற, விவாதிக்கிற விஷயம் இல்லை. அது குறித்து அனைவருமே தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறது. தெரிந்துகொள்ள விருப்பம்தான். ஆனால் எழுதப்படுவன புரிந்துகொள்ளும்விதமாக இல்லையே என்ற புகார்களும் இல்லாமல் இல்லை. அந்தக் கூற்றைப் பொய்யாக்கியவர் டாக்டர் சோம வள்ளியப்பன். பங்குச்சந்தைகள் குறித்ததுமட்டுமல்லாமல், நாட்டு நிகழ்வுகள் மற்றும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய பட்ஜெட், கச்சா எண்ணை விலை, டாலர் மதிப்பு, வங்கி வட்டி விகிதங்கள், வருமான வரி, ஜி.எஸ்.டி. போன்றவை குறித்து, தொடர்ந்து வெகுஜன பத்திரிக்கைகள் மற்றும் நாளிதழ்களில் பாமரருக்கும் புரியும் விதம் எழுதிக்கொண்டிருக்கிறார். முழுக்க முழுக்க பொருளாதாரம் குறித்து, 'சிக்ஸ்த்சென்ஸ்'க்காக சோம வள்ளியப்பன் எழுதிய நாட்டுக்கணக்கு, வாசகர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று பல பதிப்புகள் கண்டிருப்பதைத் தொடர்ந்து, 2004 தொடங்கி 2018 வரை பல்வேறு இதழ்களில் இந்தியாவின் பொருளாதார நிகழ்வுகள் குறித்து அவர் எழுதிய 59 கட்டுரைகள், நாட்டுக்கணக்கு- 2 ஆக வெளிவருகிறது. நம் நாட்டின் பொருளாதார நிகழ்வுகள் கடந்து வந்திருக்கும் பாதையை பதிவு செய்யும் ஒரு ஆவணமாக மட்டுமல்லாமல், கட்டுரைகளில் விவரிக்கப்படும் பொருள் குறித்து 2018ம் ஆண்டின் நிலை என்ன என்பதையும்- இந்திய பொருளாதாரம்: அன்றும் இன்றும்- என வாசகரே ஒப்பிட்டுப் பார்த்து, முடிவுக்கு வர உதவும் விதமாக புத்தகம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் பயன்தருகிறது. அரசியல், சமூக, பொருளாதார நோக்கர்கள், விமர்சகர்கள், மத்திய மாநில, வங்கி வேலைகளுக்கு முயற்சிப்பவர்கள் மட்டுமல்லாது, எவருக்கும் பயன்தரும் ஒரு புதிய புத்தகம். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|