குவைத் பேருந்து விபத்து 7 இந்தியர் உட்பட 15 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 02, 2018, 00:25 [IST] குவைத்தில் உள்ள எண்ணெய் நிறுவனத்தில் பணி புரியும் தொழிலாளர்கள் பணி முடிந்து இருப்பிடத்துக்கு இரண்டு பேருந்துகளில் திரும்பிக் கொண்டு இருந்தபோது, பர்கான் எண்ணெய் வயல் என்ற இடத்தில் எதிரே வந்த பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். பலியானவர்களில் 7 பேர் இந்தியர்கள் எனவும், 5 எகிப்தியர்கள் என்றும் 3 பேர் பாகிஸ்தானியர்கள் என்று கூறப் படுகிறது. காயமடைந்த இருவரில் ஒருவர் இந்தியர் என்றும் மற்றொருவர் குவைத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|