இந்தூர்: 3 மாடி கட்டிடம் இடிந்து 10 பேர் பலி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 01, 2018, 08:20 [IST] மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு மூன்று மாடி கட்டிடம் அமைந்துள்ளது. அந்த கட்டிடத்தில் ஒரு ஹோட்டலும், லாட்ஜும் அமைந்துள்ளது. நேற்று (31-03-2018) இரவு 9.20 மணியளிவில் கார் ஒன்று கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. மிகவும் பழைய கட்டடம் என்பதால் அந்த அதிர்ச்சி தாங்காமல் 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இடிந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாகும். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அந்த கட்டிடத்தின் மேல் 3 தளங்களில் லாட்ஜில் தங்கியிருந்தவர்களும், தொழிலாளர்களும் ஆவார்கள். இடிபாடுகளில் சுமார் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு நடவடிக்கையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
|
தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2016 பக்கங்கள்: 488 எடை: 550 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: 978-93-84301-50-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 450.00 தள்ளுபடி விலை: ரூ. 405.00 அஞ்சல் செலவு: ரூ. 60.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: வாழ்வின் தீரா ஆச்சரியங்களும், முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள். அசட்டுத்தனமான, மிகையுணர்ச்சியற்ற நிதானத்துடன் கதைசொல்லும் ப்ரகாஷ், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்தனி சித்திரமாகப் பதியும்படி தீட்டியிருக்கிறார். ஆண் / பெண் மனங்களில் பொதிந்து கிடக்கிற காமத்தின் மூர்க்கத்தனமும், வன்மமும் தெறிக்கத் தெறிக்க, அதன் பொருட்டெழுகிற பகையுணர்ச்சி என அவர் காட்டுகிற உலகம் என்றென்றைக்குமானது. பாலுணர்ச்சியின் எல்லையற்ற கற்பனைகள், உள்மன விகாரங்கள், அதன் மீதான சுய பகடிகள் என கதைகளில் இழையோடுகின்றன. ப்ரகாஷ் கதைகளில் வீழ்ச்சியுற்ற, தோல்வியடைந்த மனிதர்களை நாம் நிறைய சந்திக்கலாம். தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்துகொள்கிறோம். நன்றாக வாழ்ந்தவர்கள், காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச் சவாலுக்குரிய ஒன்று. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|