அதிமுக எம்.பி. சத்தியபாமாவை கொல்ல முயற்சி: கணவர் கைது கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 30, 2018, 09:00 [IST] திருப்பூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளவர் சத்தியபாமா (45). இவருக்கும் கணவர் வாசுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாகவே தகராறு இருந்து வருகிறது. 2016ம் ஆண்டு, சத்தியபாமாவுக்கு, வாசு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியிருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரில் வசிக்கும் சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சித்ததாக வாசு கைது செய்யப்பட்டுள்ளார். சத்தியபாமாவின் சகோதரர் சண்முக பிரபு கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சத்தியபாமாவின் கணவர் வாசுவின் மீது 294 (பி), 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சத்திய பாமாவுக்கும் வாசுவுக்கும், 1990 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|