காவிரிக்காக ராஜினாமா செய்தால் பாராட்டு: கமல்ஹாசன் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 16:55 [IST] காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அளிக்கப்பட்ட 6 வார அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். அப்போது அவர் மேலும் கூறியதாவது: - காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து முதல்வரை வலியுறுத்த உள்ளேன். - இதுதொடர்பாக அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். - மேலாண்மை வரியம் அமைப்பது ஒன்றும் கடினமானது அல்ல. பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதில் அமைக்கலாம். - காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம். - காவிரி விவகாரத்தில் எம்.பிக்கள் ராஜினாமா செய்தால் அதனை வரவேற்கிறேன். - காவிரி விவகாரத்தில் தமிழகம் தொடர்ந்து படிப்படியாக இறங்கி வருவது நல்லதல்ல. - காவிரி விவகாரம் தொடர்பாக ரஜினி கருத்தை வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். செய்தியாளர் சந்திப்பின் போது கமல்ஹாசன், ஏப்ரல் 1-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நேரில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|