ஐசிஐசிஐ வங்கிக்கு ரூ. 58.90 கோடி அபராதம்: ரிசர்வ் வங்கி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 29, 2018, 14:45 [IST] வாடிக்கையாளர்களுக்கு கடன் பத்திரங்களை வழங்கும்போது அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய விபரங்களை சரியாக வழங்காமை, ஒழுங்குமுறை இணக்கத்தில் குறைபாடுகள் காரணமாக ரூ.58.90 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மொத்தம் இரு வகையான பாண்டுகள் உள்ளன. விற்பனைக்கு உள்ளவை (Available for Sales- AFS) மற்றும் வியாபாரத்துக்கு உள்ளவை (Held for trading (HFT). ஆண்டுக்கு ஒரு முறை அவற்றில் மாற்றம் செய்து கொள்ள முடியும். அதுவும் நிதியாண்டின் ஆரம்பத்தில் இதனை செய்து கொள்ளும் முடியும். எச்.எஃப்.டி வகை பாண்டுகளில் (HFT)குறைந்த பட்சம் 20 சதவிகிதம் வரை வங்கி இருப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த வகை பாண்டுகளை விற்பனை செய்தமைக்காகவே ஐசிஐசிஐ வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நேற்று (28-03-2018) வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி வழங்கிய 3250கோடி ரூபாய் கடனை வாராக்கடனாக அறிவித்துள்ளதில் எந்த வித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஐசிஐசிஐ வங்கி விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், தற்போதைய ஐசிஐசிஐ வங்கித் தலைவர் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் இருவரும் இணைந்து தொடங்கிய நிப்பவார் ரினியூபல்ஸ் (Nippavar Renuubals) நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி 64 கோடி கடன் வழங்கியுள்ளது. தீபக் கோச்சாரின் அறக்கட்டளைக்கு இந்நிறுவனத்தை ரூ.9 லட்சத்துக்கு வேணுகோபால் கொடுத்துள்ளார். அதற்கு கைம்மாறாகவே ஐசிஐசிஐ வங்கி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|