25 சதாப்தி ரயில்களின் கட்டணம் குறைகிறது! கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 26, 2018, 07:45 [IST] சதாப்தி ரயில்கள் தற்போது 45 மார்க்கங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதிகப்படியான கட்டணம் காரணமாக சில மார்க்கங்களில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இதனையடுத்து, டெல்லி - ஆஜ்மிர், சென்னை - மைசூர் ஆகிய இரண்டு சதாப்தி ரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்ட பிறகு, பயணிகள் எண்ணிக்கை 63 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ரயில்வேக்கு 17% கூடுதல் வருவாய் கிடைத்தது. எனவே, இதேபோல் வருவாய் குறைவாக உள்ள 25-க்கும் மேற்பட்ட சதாப்தி ரயில்களில் கட்டணம் குறைப்பு மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரயில்வே உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த ஆண்டு குடியரசு தினம் முதல் (26-01-2018) சென்னை சென்ட்ரல் - கோவை இடையேயான சதாப்தி ரயிலில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அனுபூதி ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இப்பெட்டிகள் கண்கவர் உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரத்துடன், தானியங்கி கதவுகள், கண்களை உறுத்தாத விளக்குகள், ஒவ்வொரு இருக்கையிலும் எல்.இ.டி. திரை, மின்னணு தகவல் பலகை போன்ற பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் பெட்டியில் பயணம் செய்வதற்கான கட்டணம் சற்று கூடுதலாக உள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|