நாதெள்ளா நகைக்கடை மீது ரூ.250 கோடி மோசடி புகார் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 06:05 [IST] சென்னையைச் சேர்ந்த நாதெள்ளா நகைக்கடை நிறுவனம் 2010 ஆம் ஆண்டு முதல் ரூ 250 கோடி வரை கடனாக பெற்று மோசடி செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி சிபிஐயிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. முன்னதாக கனிஷ்க் என்ற நகைக்கடை நிறுவனம் ரூ.824 கோடி மோசடி புகாரில் சிக்கி உள்ள நிலையில் சென்னையில் மேலும் ஒரு நகை கடை வங்கி மோசடியில் சிக்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே ரூ.824 கோடி வங்கி கடன் ஏய்ப்பு வழக்கில் சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நிறுவன உரிமையாளர் பூபேஷ் குமார் வெளிநாட்டுக்கு தப்பாமல் இருக்க, சிபிஐ சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கனிஷ்க் நிறுவன வழக்கில் பூபேஷ் குமார், அவரது மனைவி நீட்டு ஜெயின் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
|
சாயி மொழிபெயர்ப்பாளர்: பி.ஆர். ராஜாராம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : ஆன்மிகம் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 225.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஷீரடி பாபாவின் வாழ்க்கை மிகவும் ரகசியமானது. நிமிஷத்திற்கு நிமிஷம் வியப்பைக் கொடுக்கக்கூடியது. ஒரு பக்கம் இவர் பொறுமையையும் கடமையையும் போதித்தார். மறுபக்கம் மிகுந்த கோபத்தையும் காண்பிக்கிறார். சில சமயம் கீதையின் ரகசியத்தையும் அதன் பொருளையும் இனிமையாக மொழிபெயர்த்து சொல்கிறார். அவ்வப்போது பெரிய ஞானிகளும் புரிந்து கொள்ள முடியாத ரகசியங்களை போதிக்கிறார். சில சமயம் கடவுளாகத் தெரியும் இவரே, சாமானிய மக்களுடன் சாமானியனாகவே வாழ்கிறார். அவருடைய தோளில் தொங்கும் தூளியில் ‘குபேரன்’ வாசம் செய்தாலும், தினமும் பிட்சை எடுக்கத் தவறுவதில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் இவை ஒன்றுக்கொன்று முரணாக இருந்தாலும் அதில் விஷயம் இருக்கிறது. போதனை இருக்கிறது. அதை பிடிவாதமான குழந்தையாகி அறிய முனையும்போது நம் சந்தேக முடிச்சுகள் எல்லாம் பாபாவின் கருணையால் அவிழ்கிறது. ‘சாயி’ சரிதத்தினால் பல பேரின் வாழ்க்கையில் சுகமும் அமைதியும் கிடைத்தது. பலரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றினார் பாபா. இந்நூல் மராத்தி, கன்னடம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மராத்தியில் மூன்று லட்சத்திற்கும் மேலான பிரதிகள் அச்சாகி இருக்கின்றன. ‘குங்குமம்’ இதழ் மூலம் தமிழாகி லட்சக்கணக்கான மக்கள் படித்த சரிதம், நூல் வடிவில் வெளிவந்திருக்கிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|