எச்.ராஜாவுக்கு மனநல பரிசோதனை: காவல்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 22, 2018, 16:20 [IST] தமிழகத்தில் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் பேசி வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை கைது செய்து மனநல மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல் ஆய்வாளரிடம் திருவேற்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் இந்த மாதம் 7ம் தேதி புகார் அளித்தார். இந்தப் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாததால், அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது புகார் மீது காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், ஹெச். ராஜாவை மனநல பரிசோதனைக்கு உட்படுத்தக் கோரும் புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார். வழக்கு குறித்து காவல்துறையின் விளக்கத்தினைப் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|