சென்னை: டிஜிபி அலுவலகம் முன் 2 காவலர் தீக்குளிப்பு முயற்சி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 18:00 [IST] தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு ஆயுதப்படைக் காவலர்கள் ரகு மற்றும் கணேஷ் ஆகியோர் இன்று சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை டிஜிபி அலுவலகத்தின் முன் தங்களின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். காவல் துறை உயரதிகாரிகள் சாதி ரீதியான பாகுபாடு காட்டுவதாகவும், சாதி அடிப்படையில் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அவர்கள் இருவரையும் அருகாமையில் இருந்த பிற காவலர்கள் தடுத்து தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றினர். ஏற்கெனவே இம்மாதம் 4ம் தேதி ஜெயலலிதா சமாதியில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் (27) என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
|
அன்னை தெரசா மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2019 பக்கங்கள்: 168 எடை: 200 கிராம் வகைப்பாடு : வாழ்க்கை வரலாறு ISBN: 978-93-83067-40-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 125.00 தள்ளுபடி விலை: ரூ. 115.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ஏழைகள் நிலவில் இருந்தால் அங்கும் சென்று அவர்களுக்குச் சேவை செய்யத் தயார் என்று சொன்னவர் அன்னை தெரசா. அதற்காகவே வாழ்வின் வசந்தங்களை எல்லாம் துறந்துவிட்டு, வாடிய மக்களுக்காக உழைக்கத் தயாரானவர். உலக மக்கள் சந்திக்கும் துன்பங்களையும் துயரங்களையும் போக்குவதற்கு தெரசா முற்பட்டபோது அவருக்குத் துணையாக வந்த நண்பர்கள் ஐவர். அன்பு, அகிம்சை, கருணை, எளிமை, பக்தி. தெரசா மேற்கொண்ட சேவைப் பயணம் என்பது சுகமான ராஜபாட்டை அல்ல. கடுமையான முள்வழிப்பாதை. அந்தப் பாதையில் அவர் எதிர்கொண்ட சவால்கள் அநேகம். துயரங்கள் அதிகம். அவற்றை எல்லாம் தாண்டித்தான் பிரம்மாண்டமான மிஷனரியைக் கட்டமைத்தார். அதைவிட முக்கியமாக, ஏழை மக்களின் மனத்தில் பிரம்மாண்டமாக உயர்ந்தார். உயரங்களுக்குச் செல்லும் எவருமே விமரிசனத்துக்குத் தப்புவதில்லை, தெரசா உள்பட. சேவை என்ற பெயரில் கிறித்தவ மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்பது தெரசாவின் மீது சுமத்தப்பட்ட ஆகப்பெரிய குற்றச்சாட்டு. தெரசா உயிருடன் இருந்த காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் விமரிசனம் இது. அன்னை தெரசாவின் ஆன்மிக, மானுட சேவையின் ஒவ்வொரு அங்குலத்தையும் விரிவாக எடுத்துச் செல்லும் நூலாசிரியர் பா. தீனதயாளன், தெரசாவின் மீது எழுப்பப்பட்ட சர்ச்சைகள் மீதும் வெளிச்சம் பாய்ச்சுகிறார். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|