காபூல் தற்கொலைத் தாக்குதலில் 26 பேர் பலி, 18 பேர் காயம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 21, 2018, 15:00 [IST] உடலில் வெடிகுண்டுகளுடன் வந்த நபர் மசூதிக்குள் நுழையும் முன் குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். நோரஸ் எனும் பெர்சிய புத்தாண்டையொட்டி நடைபெற்ற விழாவின் காரணமாக ஏராளமானோர் மசூதியில் குழுமியிருந்தனர். மக்கள் மசூதியிலிருந்து வெளியேறி நகரின் முக்கிய பல்கலைக்கழகத்தை நோக்கி செல்லும் வழியில் இத்தாக்குதல் நடைபெற்றது. தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ஐஎஸ் அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் காபூலில், அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் நிறைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் தாலிபன் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. அதே ஜனவரியில் காபூல் நட்சத்திர விடுதி ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|