லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்தது கர்நாடகா அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 19, 2018, 18:50 [IST] சமூக புரட்சியாளர் பசவண்ணர் வழியில், சிவனை வழிபடுபவர்கள் லிங்காயத்துகள். எந்த ஜாதியினராக இருந்தாலும், லிங்கத்தை பிரதிஷ்டை செய்து லிங்காயத்தாக மாற முடியும். எனவே ஜாதி பிரிவு என்பதை தாண்டி, இது ஒரு வழிபாட்டு முறையாகத்தான் பார்க்கப்பட்டது. லிங்காயத்துகள் தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்ள விரும்பவில்லை; வீர சைவர்கள் என தனி மதமாக அங்கீகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். கர்நாடகா ஆளும் அரசு இக்கோரிக்கையை ஆதரித்தது. லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகாரம் அளிப்பது குறித்து ஆய்வு செய்ய, உயர்நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் கமிட்டி அமைத்தது. குழுவின் பரிந்துரைகளையும் பெற்றது கர்நாடகா அரசு. இதனிடையே லிங்காயத்து சமூக மடாதிபதிகள் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து இது குறித்து விவாதித்தனர். இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், நாகமோகன்தாஸ் அறிக்கையை ஏற்பது என்றும், மத்திய அரசு இதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. கர்நாடக அரசு திட்டப்படி, லிங்காயத்துகளுக்கு, முஸ்லிம்களை போன்ற சிறுபான்மை மதம் என்ற அந்தஸ்து வழங்கப்படும். இதனால் லிங்காயத்து ஜாதியினர் பல சலுகைகளை அனுபவிக்க முடியும்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|