கிரெடிட் கார்ட் மோசடி : மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 11:25 [IST] ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரிசியஸ் நாட்டின் அதிபராக அமீனா குரிப்-பகிம் உள்ளார். அமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்ற போது அரசு சாரா தனியார் அமைப்பு வாங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது. அரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்தது. இந்நிலையில் அமீனா குரிப்-பகிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|