பல்சுவை இணைய இதழ்
  


23 பிரிட்டன் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷ்யா உத்தரவு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 09:15 [IST]

மாஸ்கோ: முன்னாள் உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில் 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால், 66, கடந்த 1990-ல் அந்நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றினார். இந்நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான 'எம்ஐ6' அமைப்பிலும் ரகசியமாக இணைந்த அவர், அந்நாட்டுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார். அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷ்ய அதிகாரிகள், 2004-ல் செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்தனர். தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பின், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் செர்கெய் ஸ்கிரிபால் உட்பட மூவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். ஸ்கிரிபாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் அளித்தது. இதையடுத்து, வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரில் மகள் யுலியாவுடன், 33, வசித்து வந்தார்.

இந்நிலையில் மார்ச் 4ல் செர்கெய் ஸ்க்ரிபாலும், யுலியாவும் பூங்காவில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்கள் மீது நச்சுப்பொருள் செலுத்தப்பட்டதால் உடல்நிலை ஆபத்தான நிலையை அடைந்தது.

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய போது “முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் மீது நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம். இந்தக் கொலை முயற்சிக்கு எதிராக அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றன. பேச்சுவார்த்தைக்காக பிரிட்டனுக்கு வருமாறு ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பும் ரத்து செய்யப்படுகிறது. ரஷ்ய துாதரகத்தைச் சேர்ந்த 23 அதிகாரிகள் ரகசிய உளவாளிகளாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்துக்குள் அவர்கள் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலடியாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மாஸ்கோவில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் பணியாற்றி வரும் 23 அதிகாரிகளை ஒரு வாரத்தில் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். கலாச்சார ஒத்துழைப்புக்கான பிரிட்டிஷ் கவுன்சிலை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கள் நாட்டுக்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்டு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நாங்களும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்” என கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்










தமிழுக்கு நிறம் உண்டு
ஆசிரியர்: வைரமுத்து
வகைப்பாடு : கவிதை
விலை: ரூ. 120.00
தள்ளுபடி விலை: ரூ. 110.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



தொட்டிக் கட்டு வீடு
இருப்பு உள்ளது
ரூ.95.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

என்னருகே நீயிருந்தால்
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy

மண்மேடு
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

செம்புலச் சுவடுகள்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy

இனியவள் இருபது
இருப்பு உள்ளது
ரூ.45.00
Buy

தமிழ் புதினங்கள் - 1
இருப்பு உள்ளது
ரூ.99.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)