நெஞ்சுவலி காரணமாக சசிகலா நடராஜன் மருத்துவமனையில் அனுமதி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 08:30 [IST] கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போனதால் ஆபத்தான நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரின் உறுப்புகள் பொருத்தப்பட்டதையடுத்து உடல்நலன் தேறினார். இந்நிலையில் நேற்று திடீரென ம. நடராஜனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|