டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 09:40 [IST] டி.டி.வி.தினகரன் தனது புதிய அமைப்பின் பெயரை ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்று கடந்த வியாழக்கிழமை (மார்ச் 15) மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். மேலும் கருப்பு - வெண்மை - சிவப்பு வண்ண கொடியின் நடுவில் ஜெயலலிதாவின் படம் இடபெற்றுள்ள அமைப்பின் கொடியையும் அறிமுகம் செய்தார். பின்னர் மேடை முன்பு அமைக்கப்பட்டு இருந்த 100 அடி உயர கொடி கம்பத்தில் புதிய கொடியை ஏற்றினார். இந்நிலையில் இன்று நாஞ்சில் சம்பத், “தினகரன் தொடங்கியுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.அண்ணாவையும், திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என டி.டி.வி. தினகரன் நினைக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.அரசியல் தமிழில் இனி அடைபட்டு கிடக்கமாட்டேன். அரசியலில் இனி நான் இல்லை. தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை காணலாம்” எனக் கூறியுள்ளார்.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|