பல்சுவை இணைய இதழ்
  


குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 19:35 [IST]

மதுரை: தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதால் காட்டுத் தீயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில், சென்ற ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட சுமார் 39 பேர் சிக்கினர். அவர்களில் சம்பவ இடத்திலேயே 9 பேர் கருகி இறந்தனர்.

15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள்.

இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி மகன் கண்ணன் (வயது26) என்பவரும், சென்னையை சேர்ந்த முத்துமாலை என்பவர் மகள் அனுவித்யாவும் (25) நேற்று (15-03-2018) பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் இன்று (16-03-2018) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சக்திகலா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.

பிற செய்திகள்










10 Rules of Wisdom
ஆசிரியர்: Ryuho Okawa
வகைப்பாடு : Self Improvement
விலை: ரூ. 299.00
தள்ளுபடி விலை: ரூ. 270.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com

எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888



இக பர இந்து மத சிந்தனை
இருப்பு உள்ளது
ரூ.70.00
Buy

என் காதல் தேவதையே
இருப்பு உள்ளது
ரூ.100.00
Buy

வேணு கானம்
இருப்பு உள்ளது
ரூ.40.00
Buy

இசையில் நடனத்தில் ரஸம்
இருப்பு உள்ளது
ரூ.50.00
Buy
ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)