குரங்கணி காட்டுத் தீ - உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 19:35 [IST] 15-க்கும் மேற்பட்டவர்கள் பலத்த தீக்காயம் அடைந்து மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சென்னையைச் சேர்ந்த நிஷா, ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த திவ்யா, கோவை மாவட்டம் கிணத்துக்கடவைச்சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் இறந்து போனார்கள். இந்தநிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு கவுந்தப்பாடியைச் சேர்ந்த கிரி மகன் கண்ணன் (வயது26) என்பவரும், சென்னையை சேர்ந்த முத்துமாலை என்பவர் மகள் அனுவித்யாவும் (25) நேற்று (15-03-2018) பரிதாபமாக உயிர் இழந்தனர். இதனால் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று (16-03-2018) மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த சேலம் எடப்பாடியைச் சேர்ந்த தேவி மற்றும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சக்திகலா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. குரங்கணி மலையில் நடந்த தீவிபத்து குறித்து விரிவான அறிக்கையை அளிக்க, மூத்த ஐஏஎஸ் அதிகாரி அதுல்யா மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|