ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திரத் திட்டம் : மத்திய அரசு கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 16, 2018, 12:25 [IST] தென் தமிழக மக்களின் 150 ஆண்டு கால கனவுத்திட்டம், சேது சமுத்திர திட்டம். இந்த திட்டம் நிறைவேறினால், கிழக்கு, மேற்கு கடற்கரை இடையே 424 கடல் மைல் தொலைவு குறையும். பயண நேரமும் 30 மணி நேரம் குறையும். இலங்கையை சுற்ற வேண்டியதும் இல்லை. இந்த திட்டம் 2005-ம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இந்த திட்டப்பணிகளால் ராமேசுவரத்துக்கும், மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் பாதிக்கப்படும் என கருத்து எழுந்தது. ராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்ககோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ராமர் சேது பாலத்தை இடிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என பா.ஜனதா அரசு கூறி வந்தது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்ற முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமர் பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தாமல் சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
|
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|