தினசரி தியானம் |
தாயின் உள்ளம் தன் குழந்தையிடத்துக் குற்றம் ஒன்றும் காணாது குணமே காணும் பாங்குடையவள் தாய். என் தாயே, உனதருளாலன்றி உய்யும் ஆறு நான் அறிகிலேன். கடவுளை நோக்கி நாம் ஓர் அடி சென்றால் அவர் நம்மை நோக்கிப் பத்து அடி வருகிறார். பெற்ற தாய் படைத்துள்ள உள்ளக்கசிவு கடவுளின் கருணையேயாம். தாயின் உள்ளத்தை அறிபவன் கடவுளின் கருணையை அறிபவன் ஆகிறான். எத்தன்மைக் குற்றம் இயற்றிடினுந் தாயபொருக்கும் அத்தன்மை நின்னருளும் அன்றோ பராபரமே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |