தினசரி தியானம்

தேடுதலும் தள்ளுதலும்

     உனக்கென்று வாழக் கற்றுக்கொண்டால் பிறகு தேவாதிதேவா, நான் தேட வேண்டியதோ தள்ள வேண்டியதோ ஒன்றுமில்லை.

     இனியது என்று ஒன்றைப் பெற முயலுதலும், இன்னாதது என்று ஒன்றை அகற்ற முயலுதலும் உலக மக்களது இயல்பு. பண்பாடு அடைய முயலுபவர் போக்கு அத்தகையதன்று. இனியது, இன்னாதது வாயிலாக இயற்கைத் தாய் உயிர்களைத் திருத்தியமைக்கிறாள். தானாக வந்தெய்தும் இனியதனிடத்து நல்லார் நாட்டம் வைப்பதில்லை; தானாக வந்தெய்தும் தீதினிடத்தும் அவர்கள் வெறுப்புக் கொள்வதில்லை. ஆத்மபரிபாகத்துக்கு அவ்விரண்டையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

-திருக்குறள்

குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க :

ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம்,
திருப்பராய்த்துறை - 639115.
திருச்சி மாவட்டம்.