தினசரி தியானம் |
கள் வெறி கடவுளே, உனது உணர்ச்சியில் நான் கள் குடியனபோன்று ஆய்விடுவேனாக. மிகைபடக் குடித்த ஒருவன் ஒரு வண்டியினின்று கீழே விழுகிறான். வண்டியில் போய்க் கொண்டிருந்த உணர்ச்சி அவனுக்கில்லை; கீழே வீழ்ந்த உணர்ச்சியும் இல்லை. உயிர் வாழ்ந்திருப்பது, மரணமடைவது, அஞ்சுதல் இவைபோன்ற எண்ணங்களுக்கு அப்பால் அவன் போய்விடுகிறான். கள்ளுடன் வைத்த தொடர்பு தாற்காலிகமாக இத்தகைய பேருணர்ச்சியைக் கொண்டுவருமானால், கடவுளுடன் வைக்கும் தொடர்வு எத்தகைய நிலைத்த நல்லுணர்ச்சியைக் கொண்டு வராது! நித்திரையிற் செத்தபிணம் நேருமுடற்கு இச்சைவையாச் சுத்தர்களே நல்ல துறவோர் பராபரமே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |