தினசரி தியானம் |
அபரிக்ரஹம் இறையே, உன்னை அடைதற்கு இடைஞ்சலாயுள்ள பொருள்களை நான் ஏலேன். தேவைக்கு மேற்பட்ட உணவை உண்டால் ஜீரணக் கருவி கெட்டுப்போம். தேவைக்கு மிஞ்சிய பொருள்களை உடைத்திருந்தால் அல்லது பிறரிடமிருந்து ஏற்றுக்கொண்டால் மனது கெட்டுப்போம். அதிகமான பொருள்களை வைத்திருப்பவன் அப்பொருள்களைப் பற்றி அடிக்கடி நினைத்தாகவேண்டும். அவைகளை நினைக்குமளவு மனது மாசுபடிகிறது. பிறர் தரும் பொருளை இலவசமாக ஏற்பதால் மனது பிறர்க்கு கடமைபட்டதாகிவிடுகிறது. எதையும் இலவசமாக ஏற்கலாகாது. ஏற்பது இகழ்ச்சி. இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. -திருக்குறள் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |