தினசரி தியானம் |
ஆகர்ஷண சக்தி அண்டமெங்கும் ஆகர்ஷண சக்தியாய் ஆவிர்பவித்த பண்டைப்பொருளே, என்னை நீ ஆகர்ஷித்துக் கொள்வாயாக. ஒவ்வொரு பொருளும் தனக்குச் சொந்தமானதை ஆகர்ஷிக்கிறது. தனக்குச் சொந்தமான கோளங்களைச் சூரியன் தன்பால் இழுத்து வைக்கிறது. பூதங்கள் பூதங்களைப் பற்றி இழுக்கின்றன. தாய்க்கும் சேய்க்குமிடையே அதே சக்தி பந்தமாக வடிவெடுக்கிறது. ஆயிரம் ஆடுகளையும் குட்டிகளையும் பிரித்துப் பிறகு ஒன்று சேர்த்தால் ஒவ்வொன்றும் தனக்குச் சொந்தமானதைத் தேடித் தெரிந்துகொள்கிறது. நமக்குச் சொந்தமான பொருளிடத்து நாம் விரைவில் சேரவேண்டும். என் உள்ளம் கவர் கள்ளன். -திருஞானசம்பந்தர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |