தினசரி தியானம் |
வித்து எண்ணியதை எண்ணியாங்கு அளிக்கவல்ல நுண்பொருளே, நின்னையே, நான்யாண்டும் எண்ணியிருப்பேனாக. விதையிலிருப்பது எதுவோ அது பிறகு மரமாகப் பரிணமிக்கிறது. நமக்கு மனதிலிருக்கும் எண்ணமே வித்து. வெளியுலகில் தென்படும் இன்ப துன்பங்களே அதன் விளைவு. மனதில் இல்லாததை வெளியுலகில் நாம் காண முடியாது. மனத்தை நல்ல மனமாக மாற்றுமளவு வெளியுலகும் நல்லதாக நமக்கு மாறி விடுகிறது. பெருவாழ்வுக்கேற்ற நல்ல வித்து நம் மனதினூடு உள்ளது. விளைவதுண்டோ நின்னருளாஞ் சித்தன்றி யாங்களுண்டோ செப்பாய் பராபரமே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |