தினசரி தியானம் |
ஞானப்பிறவி பரம்பொருளே, உன்னை நான் அறிந்து கொள்ளும் பொழுது பெருவாழ்வு என்னும் புதிய பிறவி எடுக்கிறேன். உடல்கள் பல எடுப்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. புதிய உடல் எடுத்திருப்பதைக் குறித்து மனிதன் மகிழ்ந்திருக்க வேண்டியதில்லை. ஞானம் உதயமாகும்பொழுது இறைவனது மகிமை உள்ளபடி தெரிகிறது. ஞானத்தில் பிறந்திருப்பவரே நல்வாழ்வு வாழ்கின்றனர். உள்ளும் புறமும் தெய்வ சாந்நித்தியத்தை உணர்பவரும் அவர்களேயாம். அன்றுநான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன் நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என்நெஞ்சுளே. -திருமழிசை ஆழ்வார் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |