பல்சுவை இணைய இதழ்
  
நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி



சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்


வீடியோ



     சுண்டைக்காய் செடி தமிழகத்தில் பரவலாக காணப்பெறும் ஒரு தாவரமாகும். இதை ஆங்கிலத்தில் Turkey Berry என்றும் அழைப்பார்கள்.

     காடுகளில் தானாகவே வளர்வது மலை சுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பது பால் சுண்டை என்றும் அழைக்கப்படுகிறது.

     சுண்டைக்காய் நம் வீட்டின் அருகாமையில் வளர்ந்தாலும் இதனுடைய கசப்பு சுவையால் மக்களால் விரும்பப் படாத ஒரு உணவு பொருளாக உள்ளது.

     சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.

     சுண்டைக்காயின் இலைகள், வேர், கனி என முழுத்தாவரமும் மருத்துவ குணம் உடையது. இலைகள் ரத்தக் கசிவினை தடுக்கும். கனிகள் கல்லீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். முழுத்தாவரமும் ஜீரணத் தன்மை கொண்டது.

     இந்த சுண்டைக்காயை உணவோடு சேர்த்து உண்டு வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும்.

     வாரம் ஒரு முறையாவது சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

     சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம்.

     மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும்.

     சுண்டைக்காயில் கால்சியம் சத்து மிகுந்து காணப்படுவதால் இவை எலும்புகளுக்கு வலுவூட்டும்.

     சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

     புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து.

     ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்பு சளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட நோய் கட்டுப்படும்.

     முற்றின சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் பயன்படுத்தலாம். சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.













ஞானவியல்
ஞானவியல்
ஆசிரியர்: சு. தீனதயாளன்
வகைப்பாடு : தத்துவம்
விலை: ரூ. 50.00
தள்ளுபடி விலை: ரூ. 45.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com


ஞானவியல்
ஞானவியல்
இருப்பு உள்ளது
ரூ.50.00
நூல் வாங்க!

ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)