பல்சுவை இணைய இதழ்
  
நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது நேரடி ஒளிபரப்பு - இஸ்ரோ
உலகக் கோப்பை செஸ் இறுதி போட்டியில் கார்ல்சென்-பிரக்ஞானந்தா
தென்ஆப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு
லிபியாவில் ஆயுத கும்பல் சிறை பிடித்த 17 இந்தியர்கள் மீட்பு
பாகிஸ்தானில் லாரியில் குண்டு வெடித்து 11 தொழிலாளர்கள் பலி


செவ்வாழையின் மருத்துவ குணங்கள்


வீடியோ



     உலக மக்களால் அதிகம் சாப்பிடப்படும் பழம் வாழைப்பழம். அதன் ஒரு வகையான செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. பல்வேறு நோய்களிலிருந்து செவ்வாழை நம்மைக் காக்கிறது.

     உடல் எடை குறைப்பது என்பது பெரும் பிரச்சனையாவே மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலையில் தினம் ஒரு செவ்வாழையை காலையில் சாப்பிட்டால் அதிக நேரத்துக்கு பசி எடுக்காமல் இருக்கும். அதனால் கண்ட உணவுகளை சாப்பிடாததால் உடல் எடை அதிகரிக்காது.

     செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பாதிப்பு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் அந்நோயிலிருந்து விடுபடலாம்.

     செவ்வாழையில் அதிகமாக உள்ள பீட்டா-கரோட்டீன், தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இதய நோய், புற்று நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.

     செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் சென்று வைட்டமின் ஏ வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும், சரும ஆரோக்கியத்தையும் அளிக்கிறது.

     செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இது சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கிறது.

     மேலும் செவ்வாழையில் உள்ள பொட்டாசியம் உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளுக்கு பலம் சேர்க்கிறது.

     இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்க செவ்வாழையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உதவுகின்றன.

     ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும்.

     செவ்வாழையில் உள்ள ஆன்டாசிட் தன்மையினால் நெஞ்செரிச்சல் பிரச்சனை நீங்கும்.

     நரம்புத் தளர்ச்சி மற்றும் ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் தினசரி இரவு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் விரைவில் இந்த குறைபாடுகள் நீங்கும்.

     சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

     பல்வலி, பல்லசைவு போன்ற பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

     தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.

     நாள் முழுதும் புத்துணர்ச்சியாக இருக்க தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.













வான் நெசவு
வான் நெசவு
ஆசிரியர்: ஜெயமோகன்
வகைப்பாடு : சிறுகதை
விலை: ரூ. 215.00
தள்ளுபடி விலை: ரூ. 205.00
அஞ்சல்: ரூ. 40.00
www.dharanishmart.com
பேசி: +91-94440-86888
மின்னஞ்சல்: dharanishmart@gmail.com


ஊசியும் நூலும்
ஊசியும் நூலும்
இருப்பு உள்ளது
ரூ.40.00
நூல் வாங்க!

ரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.
உதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.
அஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)