கோவில் வாசல் படியை எப்படி கடக்க வேண்டும்?

temple entry

     கோவில் செல்லும் அனைவருக்கும் மனதில் எழும் ஒரே கேள்வி கோவிலுக்கு போகும் முன் கோவில் நுழைவு வாசலை மிதித்து செல்லவேண்டுமா? இல்லை படிக்கட்டை தாண்டி செல்ல வேண்டுமா என்ற குழப்பம் இன்றும் அனைவரின் மனதில் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த குழப்பத்தைப் பற்றிய முழு விவரத்தையும் பற்றி நாம் இப்போது அறிந்து கொள்வோம்.

கோவில் செல்லும் முன் எப்படி செல்ல வேண்டும்?

     கோவிலுக்கு செல்லும் முன் பக்தர்கள் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஆறு, குளம் அல்லது தண்ணீர் குழாய் உதவியுடன் கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு தான் கோவிலுக்கு உள்ளே செல்ல வேண்டும்.

     கை, கால்களை கழுவிய பிறகு ஒரு சொட்டு நீரை தலையில் தெளித்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நாம் கடவுளை வணங்குவதற்கு முன் நமது உடலை தயார் செய்து கொள்கிறோம் என்று அர்த்தம்.

     அடுத்து கோவிலுக்குள் செல்லும் முன்பு கோவில் கோபுரத்தையும், கலசத்தையும் வணங்கிய பிறகுதான் கோவில் உள்ளே செல்ல வேண்டும்.

     அடுத்து கோவில் வாயிலில் காவலுக்காக நின்று கொண்டிருக்கும் துவார பாலகர்களை வணங்கி அவர்களிடம் உள்ளே செல்ல மனதார அனுமதி வேண்டிப் பெற வேண்டும்.

temple entry

கோவில் வாசல் படியை எப்படி கடக்க வேண்டும்?

     அதன் பின்னர் கோவிலின் நுழைவாயிலில் உள்ள வாசற்படியை நாம் தாண்டித்தான் செல்ல வேண்டும். கோவில் படியை தாண்டி செல்வதால் நமது மனதில் இருக்கும் கவலைகள், கெட்ட விஷயங்கள், எதிர்மறை எண்ணம் அனைத்தையும் வெளியில் விட்டு செல்வதாக ஐதீகம் கூறுகிறது. அதாவது கோயிலுக்குள் நுழையும் நாம் சாதாரண மனிதனாக, எந்த விதமான கெட்ட எண்ணங்களுக்கும் இல்லாமல், நமது அனைத்து பிரச்சினைகளையும் தாண்டி, நிறைந்த இறை சிந்தனையுடன் இறைவனை வழிபடச் செல்கிறோம் என்று பொருள்.

temple entry

கோவில் வாசல் படியை மிதித்து சென்றால் என்ன அர்த்தம்?

     கோவில் படிக்கட்டை தாண்டாமல் மிதித்து சென்றால், நாம் மனதில் உள்ள பிரச்சனைகளையும், எதிர்மறை எண்ணங்களையும் நம் கூடவே கோவிலுக்குள் அழைத்து செல்வதாக பொருளாகிவிடும். இது நாம் கோவிலுக்கு செல்வதன் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

     இறைவன் குடி கொண்டுள்ள கோவிலில் தினமும் ஒலிக்கும் மந்திர ஒலி, நாதஸ்வரம், மேள சத்தங்கள் போன்றவைகளால், நேர்மறை அதிர்வுகள் நிறைந்து இருக்கும். ஆகவே இறைவனை வழிபடச் செல்லும் நாமும் இதே போன்ற நேர்மறைச் சிந்தனையுடனேயே சென்றால் தான் இறைவழிபாட்டின் முழு பயனையும் அடைய முடியும்.