தினசரி தியானம் |
ஆத்மபோதம் பராபரமே, எனது பேரியல்பை உணர்வதே உனக்குகந்த வழிபாடாகிறது. இராம காரியத்துக்காகக் கடல் கடந்து இலங்கைக்குச் செல்ல இயலாத ஹனுமான் பட்டினிகிடந்து சாகத் தீர்மானித்தான். அப்பொழுது அவனுடைய நிஜ சொரூபம் அவனுக்கு ஞாபமூட்டப்பட்டது. ஆத்மபோதம் தலையெடுத்தது. பேருணர்ச்சியே வடிவெடுத்தவன் ஆனான். அவ்வுணர்ச்சி விசுவரூபமாக மாறியது. எக்காரியத்தையும் தன்னால் சாதிக்கமுடியுமென்று அவன் உறுதிகட்டினான். அப்படியே செய்து முடித்தான். அந்த ஆத்மபோதம் நம் அனைவர்க்கும் சொந்தம். ஆவிக்குள் ஆவியெனும் அற்புதனர் சிற்சுகந்தான் பாவிக்குங் கிட்டுமோ சொல்லாய் நீ பைங்கிளியே. -தாயுமானவர் குறிப்பு : ஸ்ரீமத்சுவாமி சித்பவானந்தர் அருளிய தினசரி தியானம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது. பிரதிகளுக்கு தொடர்பு கொள்க : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை - 639115. திருச்சி மாவட்டம். |
எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888 |
|